திருமணமான புது தம்பதிகளை கவனித்தது உண்டா? ஹீரோ,ஹீரோயின் போலத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பார்க்கும் நமக்கும் விஜய் சேதுபதி சொல்வது போல 'ப்ப்பா..' என்பது போல இருக்கும். வாழ்வின் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கை முழுக்க இந்த பயணம் தொடர்வதில்லை. ஏதோ ஒரு இடத்தில் இருவருக்கும் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால் ஒரு சிலர் ஐம்பது வயதானாலும் தங்களது காதலை மங்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். இருவருக்கும் இந்த புரிதல் எப்படி ஏற்படுகிறது? 'நானும் என் மனைவிக்கு பிடித்த கணவனா' என்பதை தீர்மானிக்கும் பத்து கேள்விகள் உங்களுக்காக..