notification 20
Spellbound
சுசித்ரா முன்பு வாயை திறக்க முடியாமல் திணறிய பயில்வான் ரங்கநாதன்! சம்மந்தப்பட்டவங்களே நேரடியா பேசுனா மட்டும் தான் தலைவன் அமைதி ஆவார் போலயே!

பயில்வான் ரங்கநாதன் யார் என்று தெரியாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். திரைத்துறையில் உள்ள எல்லா நட்சத்திரங்களின் அந்தரங்க லீலைகளை பற்றி அப்பட்டமாக பேசுபவர் தான் இந்த பயில்வான் ரங்கநாதன். இவர் சொல்லும் விஷயங்களில் உண்மை இருக்கா இல்லையா என்று யாரும் பார்க்காமல் இவர் சொல்வது தான் தேவ வாக்கு என்பதை போல இவரின் விடீயோக்களை ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.

சில பிரபலங்கள் இவர் பேசுவதை எதிர்த்து கேள்வி கேட்டாலும் அதை எல்லாம் சட்டை பண்ணிக்க மாட்டார் பயில்வான். அண்மையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா பற்றி பயில்வான் ரங்கநாதன் ரொம்ப மோசமாக பேசி இருந்தார். சுசித்ராவை அவருடைய கணவர் விவாகரத்து செய்ததற்கு சுசித்ராவின் நடவடிக்கைகள் தான் காரணம் என்றும், சுசித்ராவின் அந்தரங்கள் பற்றி ரொம்ப மோசமாகவும் பேட்டி கொடுத்திருந்தார்.

மற்ற பிரபலங்களை பற்றி பயில்வான் ரங்கநாதன் என்னதான் பேசினாலும் யாரும் பெருசா கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். சுசித்ராவும் அப்படி தான் விட்டுருவாங்க என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார் பயில்வான். சுசித்ராவே நேரடியாக பயில்வான் ரங்கநாதனுக்கு போன் பண்ணி கிழித்து தொங்கவிட்டுவிட்டார். இந்த செய்தி எல்லாம் உங்களுக்கு எங்க இருந்து கிடைக்குது, இதெல்லாம் உண்மையான்னு உங்களுக்கு தெரியுமா, எல்லாம் என்னுடைய கணவர் சொன்னாருன்னு சொல்றீங்களே அதுக்கு உங்ககிட்ட ஏதாவது புரூப் இருக்கா என்று கேட்டுள்ளார்.

சுசித்ராவின் கேட்ட கேள்விகளை பார்த்து பயில்வான் பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார். ஒரு பொண்ண பத்தி எப்படி நீங்க இப்படி பேசலாம், உங்களுக்கும் குடும்பம், குழந்தை குட்டி இருக்குல்ல, உங்க பொண்ணுக்கும் என் வயசு தானே ஆகுது, அப்புறம் எப்படி என்ன பத்தி இப்படி நீங்க அவதூறா பேசுறீங்க என்று சுசித்ரா கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பயில்வான் ரங்கநாதன் திணறிவிட்டார். இந்த மாதிரியான ஆட்களை எல்லாம் திருப்பி கேள்வி கேட்டால் தான் அமைதி ஆவாங்க என்று சமூக வலைத்தளங்களில் சுசித்ராவுக்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share This Story

Written by

Karthick View All Posts