வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை அடைய நினைத்தால், மற்றொன்றை இழந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதை ரஜினியின் வாழ்ககை மூலம் அறிந்துகொள்ளலாம். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் அல்லாமல் இரண்டு காலையும் நம்பிக்கையுடன் எடுத்து வைக்கும் போது எல்லாமே வசப்படும் என்பதை சொல்லாமல் சொல்கிறது ரஜினியின் வரலாறு. தான் பார்த்து கொண்டிருந்த அரசு வேலையை விடுத்து, தன் விருப்பத்தை நோக்கி நகர்ந்து வெற்றி கண்டதன் விளைவு, இன்று அவரை ஊரே கொண்டாடுகிறது. ரஜினி குறித்த சுவாரஸ்ய கேள்விகள் இந்த பதிவில். நீங்க தீவிர ரஜினி ரசிகராக இருந்தால், பதில் சொல்லுங்க பார்க்கலாம்.