notification 20
Hugs & Kisses
இரவு கூட்டம் இல்லாத பேருந்தில் ஆண்களுக்கும் அரங்கேறும் அ சிங்கம்! கண்ட இடத்தில் கை வைத்து கசக்க வந்த சனியன்! யப்பா! பெண்கள் எப்படியோ?

இரவு நேர பேருந்து பயணம் வாழ்வில் எல்லோருக்குமே ஒரு கசப்பான அனுபவத்தை கொடுத்திருக்கும். இதில் ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் பார்க்கத்தேவையில்லை. ஒருமுறை கோவையில் இருந்து சென்னை போக வேண்டிய கட்டாயம். இரவு 9 மணிக்கு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். பெருசா கூட்டம் இல்லை. நிறைய சீட்டுகள் காலியாகவே இருந்தது. ஈரோடு கிராஸ் பண்ணும் வரையில், பாதிக்கும் மேற்பட்ட சீட் நிரம்பவே இல்லை. 1 மணி இருக்கும், சேலம் பஸ் ஸ்டேண்டில் பஸ் நின்றுகொண்டிருந்தது.

ஒரு 35 வயது மதிக்கத்தக்க ஆள் ஏறினார். முன்னாடி நிறைய சீட் காலியாக இருந்தும், எனக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டார். சரக்கு பார்ட்டி போல, ம து வாடை கு டலைப் பிடுங்கியது. ஜன்னல் ஓரமாக தலையை சாய்த்துக்கொண்டு, குளிர் அடித்தாலும் பரவாயில்லை என, ஜன்னலை திறந்துவிட்டேன். பல்லைக் கடித்துக்கொண்டு பயணிக்க வேண்டிய கட்டாயம். ஒரு அரை மணி நேரம், சில்லென்ற காற்று பட்டதால், தூக்கம் கண்களை சொருகியது. அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன்.

திடீரென கால் மீது ஏதோ ஊர்வது போல தெரிந்தது. விழித்துப்பார்த்தால், சரக்கு பார்ட்டி தூங்கி, தூங்கி என் மீது விழுந்து கொண்டே, கைகளை கால் மீது வைத்து உரசியிருக்கிறான். கொஞ்சம் தள்ளி உட்காருங்கன்னு சொன்னதற்கு, ஒரு வித்தியாசமான பார்வையில் முறைத்துக்கொண்டே கொஞ்சமாக நகர்ந்து உட்கார்ந்தான். அதற்கு பிறகு தூக்கமே இல்லை. திண்டிவனம் நெருங்கும் வரையில் விழித்துக்கொண்டே தான் வந்தேன். பிறகு 3 மணி வாக்கில் மீண்டும் தூக்கம் வர, மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து பேன்ட் ஜிப்பை யாரோ அவிழ்ப்பதை போன்ற ஒரு உணர்வு. கண்விழித்து பார்த்தால், அந்த ஆளே தான். போதையின் உச்சத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், எல்லை மீறினான். அப்போதே புரிந்துவிட்டது அவன் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பது. தன்னிலை மறந்து இருப்பனை, ஏன் அவமானப்படுத்த வேண்டுமென நினைத்து, அதிர்வு அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என, பின் இருக்கையில் கடைசி சீட் மாறி அமர்ந்துகொண்டேன். எனக்கு மட்டும் தான் இந்த மாதிரியான சம்பவம் நடந்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன். கடைசியில் பார்த்தால், எனக்கு தெரிந்த நிறைய ஆண்களுக்கு இது போல நடந்துள்ளது. யாரும் வெளியில் சொல்வதில்லை. அவ்வளவு தான். ஆண்களுக்கே இந்த நிலைமை என்றால், பெண்களை நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு. 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts