ஆங்கிலேயர்கள் நம் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்னர் முகலாய அரசர்கள் நம் இந்தியாவின் மீது போ*ர் தொடுத்து இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்துவந்தனர். இந்தியாவை சில முகலாய மன்னர்கள் சிறப்பாகவே ஆட்சி செய்தனர். இன்றளவும் உள்ள மிகப்பெரிய கோட்டைகளை இந்த முகலாய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தான் கட்டினார்கள். ஆனால் சில முகலாய மன்னர்கள் மட்டும் இந்திய மக்களை கொ*டுங்கோல் ஆட்சி செய்துவந்தனர். அவர்களில் மிக முக்கியமான மன்னர் தான் இந்த ஔரங்கசீப்.
இவர் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகானின் ஐந்தாவது மகன். தனது தந்தையை சா*கும் வரை சிறைச்சாலையில் அடைத்த பெருமை இவருக்கு தான் சேரும். அதேபோல தனது அண்ணனுக்கு கிடைக்க வேண்டிய மன்னர் பதவியை மிகவும் சாமர்த்தியமாக அடைந்து ஆட்சி கட்டிலில் ஏறினார். இந்தியா முழுவதும் இந்துக்களின் கோவில்கள் இருக்கக்கூடாது என்று நினைத்து பல இந்து கோவில்களை அழித்த பெருமையும் இவருக்கு தான் சேரும்.
ஒரு ஊருக்கு போ*ர் செய்ய சென்றால் அந்த ஊரின் தலைநகரையே தன் தலைநகராக மாற்றி போ*ர் புரிந்து வந்தார். இதனால் இந்தியாவில் பல இடங்களை இவரால் கைப்பற்ற முடிந்தது. சீக்கியர்களின் ஒன்பதாவது குருவை சி*த்ரவதை செய்து கொ*ன்றதால் இன்று வரை சீக்கியர்களால் இவர் வெ*றுக்கப்படுகிறார்.
தனது தாத்தா அக்பர் கொண்டுவந்த ஒரு இந்து முஸ்லீம் சம்மந்தமான ஒரு சட்டத்தை இவருக்கு முன்னர் ஆட்சி செய்த மன்னர்கள் நீக்கினார்கள். இந்த கொ*டுமையான சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திய பெருமையும் இவருக்கு தான் சேரும். என்னதான் இந்தியா முழுவதும் இவர் நிறைய பகுதிகளை போ*ர் புரிந்து வெற்றி பெற்றிருந்தாலும் இவர் யாரையும் நம்ப மாட்டார். அதனால் கடைசி வரை தனக்கென்று எந்த ஒரு உண்மையான நட்பும் இல்லாமல் தவித்து வந்தார். இவரைப்போல இந்தியாவை கொ*டூரமாக போர் புரிந்து ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் யாரும் இல்லை என்று வரலாறு சொல்கிறது.