தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருடைய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகின்றன. நயன்தாராவின் சம்பளம் மட்டும் சுமார் ஆறு கோடி முதல் எட்டு கோடி வரை வாங்குகிறார் என செய்திகள் வளம் வருகின்றன. நடிகை நயன்தாரா இப்போதெல்லாம் வெறுமனே கதாநாயகி மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நடிகை ஆண்ட்ரியா ஆரம்பம் முதலே தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்கக்கூடியவர். சினிமா துறையில் பின்னணி பாடகராக அறிமுகமாகி தற்போது சிறந்த நடிகையாக வளம் வருகிறார். இந்நிலையில் வெட்டிப்பசங்க என்னும் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகைகள் நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியாவை க டு மை யா க விமர்சித்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியவை :
"கொ ரோ னா கால கட்டத்தில் தயாரிப்பு செலவுகளையும், நடிகர் நடிகைகள் சம்பளத்தையும் கு றை க் க வேண்டும். சில நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கிறார்கள். நடிகை நயன்தாரா படங்களில் நடிப்பதற்கு சிகை அலங்கார நிபுணர்களையும்,ஆடை வடிவமைப்பாளரையும் மும்பையில் இருந்து வர வைக்கிறார். அவர்களுக்கு விமான செலவு, தங்கும் இடம் ஆகியவற்றை தயாரிப்பாளர்கள் தான் செலவு செய்ய வேண்டியுள்ளது. நடிகை நயன்தாராவுக்காக மட்டும் ஏழு நிபுணர்கள்களை வர வைக்கிறார். நாள் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் வரை செலவாகிறது. நயன்தாரா சுமார் 40 நாட்கள் கால்சீட் கொடுத்தல் ஒரு தயாரிப்பாளருக்கு மட்டும் 60 லட்சம் வரை செலவாகிறது.
தமிழ் நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா கூட மும்பை ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார நிபுணர் வேண்டும் என்று கூறுகிறார். நடிகர்கள் தங்களின் பாதுகாவலர்களுக்கு தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் தர வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி எல்லாம் நடிகர் நடிகைகள் தேவை இல்லாமல் செலவு வைத்தால் சினிமா எப்படி வாழும். இதனால் தயாரிப்பாளர் பெருத்த ந ஷ் ட ம் அடைகின்றனர். இனிவரும் நாட்களில் இது போன்ற தேவை இல்லாத செலவுகளை அவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த வெட்டிப்பசங்க படம் வெற்றி பெறும்" என்று கூறினார். நடிகைகள் நயன்தாரா பற்றி கே.ராஜன் காட்டமாக பேசியதால் நயன்தாரா ரசிகர்கள் தயாரிப்பாளர் மீது செம்ம கோ வ த் தி ல் உள்ளனர்.