notification 20
Daily News
கம்பெனி குடுக்க நினைச்சதுக்கு கவர்ன்மென்ட் வேலை பரிசு! கேரளாவில் அரங்கேறிய வினோத சம்பவம்!

அரசாங்க உத்தியோகம் வாங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது அனைவரும் நன்றாக அறிந்த விஷயம் தான். அப்படி இருக்கும் போது இங்க ஒரு வீட்டில் அம்மா மற்றும் மகன் இரண்டு பேர் அசால்ட்டாக அரசுப்பணியில் சேரவுள்ளனர் என்பது கொஞ்சம் கூட நம்ப முடியாத வகையில் இருக்கிறது. கேரளாவில் அரங்கேறியுள்ள இந்த வினோதம் நாட்டிலுள்ள அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

mom son govt job kerala

கேரளாவிலுள்ள மலப்புரம் பகுதியில் வசித்து வரும் பிந்து மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகிய இருவர் தான் இந்த அரிய சாதனைக்கு சொந்தக்காரர்கள். தனது ஊரில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் வேலை பார்த்து வந்த பிந்து தன்னுடைய மகனுடன் சேர்ந்து அரசுப்பணிக்காக படிக்க ஆசைப்பட்டுள்ளார். மகன் கல்லூரி படிப்பை முடித்ததும் இருவரும் ஒரு கோச்சிங் கிளாசில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தனர்.

mom son govt job kerala

ஒன்றாக படித்து தேர்வெழுதிய தாய், மகன் இருவருமே அதில் தேர்ச்சி பெற்று இப்போது அரசாங்க அதிகாரிகளாக பதவியேற்க உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய விவேக் தன்னுடைய தந்தை தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து தன்னையும் அம்மாவையும் படிக்க ஊக்கப்படுத்தியதாக கூறியுள்ளார். அம்மா, மகன் என இருவரும் ஒன்றாக சேர்ந்து நிகழ்த்திய இந்த வினோத சாதனை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share This Story

Written by

J Gowthama Raja Kumaran View All Posts