சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் பாரத பிரதமர் நரேந்திர மோடி பெயரில் 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் விற்பனையை துவக்கியுள்ளனர். முதல் நாளான நேற்று கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்கள் அனைத்தையும் மக்களுக்கு இலவசமாக வழங்கி ஆச்சர்யப்படுத்தினர்.
பேருந்து பயணிகள் பலரும் காசு கொடுத்து வாங்கும் தண்ணீர் பாட்டிலை இலவசமாக வாங்கிக்கொண்டு பயணித்தனர். தண்ணீர் பாட்டிலை வினியோகம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் விரைவில் சேலம் மாவட்டம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம் என்று கூறினார்கள்.
சேலம் மாவட்டத்தின் பாஜக தலைவர் சுரேஷ்பாபு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். மோடியின் பெயரில் பாரதிய ஜனதாவை சேர்ந்த தொண்டர்கள் கட்சிப் பாகுபாடு இன்றி அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் வினியோகம் செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்று பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.