தமிழ் சினிமாவில் இசையின் மேதை என்றால் அவர் இளையராஜா மட்டுமே. இவரின் இசைக்கு மயங்காத ஆட்களே இங்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குழந்தையை தூங்க வைப்பதற்கு கூட இசைஞானியின் பாடலை போட்டால் தான் குழந்தைக்கு தூக்கம் வரும். என்னதான் இவர் 90களில் இசையின் மேதையாக திகழ்ந்தாலும் இன்றும் இவரின் பாடலை ரசிக்காத ஆட்கள் இங்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஆனால் இவர் மைக்கை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டால் என்ன பேசுகிறோம் என்று தெரியாத அளவுக்கு தன்னுடைய வாய்க்கு வந்தபடி பேசுவார். அண்மையில் கூட இவர் அம்பேத்கார் பிறந்தநாள் அன்று அம்பேத்காரை மோடியுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதனால் தமிழ்நாடு முழுவதும் இருந்து இவருக்கு எதிர்ப்புகள் வலுக்க ஆரம்பித்தன.
இதேபோல நடிகர் பாக்யராஜும் அண்மையில் பாஜக கட்சிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பேசி இருந்தார். ஆனால் அவருக்கு எதிர்ப்பு குரல் வலுக்க ஆரம்பிக்கவே தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டார். ஆனால் இன்று வரை இளையராஜா அம்பேத்கார் மற்றும் மோடி பற்றி பேசியதற்காக எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்காமல் தன்னுடைய கருத்தில் நிலையாக இருக்கிறார். இதனால் இவருக்கு நிறைய பேர் தற்போது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா பாஜக கட்சியிடம் இருந்து ஏதோ பெருசாக எதிர்பார்க்கிறார், அடுத்த ஜனாதிபதி பதவிக்காகத்தான் இப்படி எல்லாம் மோடியை புகழ்கிறார் என்றெல்லாம் சிலர் வாய்க்கு வந்தபடி கமெண்ட் செய்து வருகின்றனர். அதை விட ஒரு செம்ம காமெடி கதை தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு பேசி புகழ்ந்ததற்காக நம் இந்திய பிரதமர் மோடியே இளையராஜாவுக்கு போன் பண்ணி ரொம்ப நன்றி இசைஞானி என்று சொன்னதாக ஒரு புரளி கிளம்பியுள்ளது. அடிச்சு விடறதுக்கும் ஒரு அளவு இருக்கு, ஏன்பா இப்படி எல்லாம் பேசுறீங்க என்று உண்மை நிலை அறிந்த மக்கள் இணையதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.