என்னுடைய கல்லூரியில் இது மிக சர்வ சாதாரணம். நண்பர் வட்டாரத்தில் மிக சாதாரணமாக எந்த பெண்களுடன் உறவு வைத்திருக்கிறார்கள் அப்படின்னு விவாதிப்பார்கள். இப்போதும் கூட நூற்றுக்கு 90 பெண்கள், ஏதாவது ஒரு வகையில் ஏமாறும் நிலையில் தான் உள்ளனர். பெரும்பாலும், திருமணத்திற்கு முன்பே கற்பை இழந்து விடுகின்றனர். ஒரு சிலர் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். காதலன், நண்பன், உறவினர் என ஏதோ ஒரு வகையில் அத்துமீறல் அரங்கேற்றப்படுகிறது.
நான் நேரில் சந்தித்த வரையில் நூற்றுக்கு 10 சதவிகித பெண்கள் கற்பு விஷயத்தில் செம்ம போல்டு. அவர்களை எந்த விதத்திலும் ஏமாற்ற முடியாது. மீறி முயற்சித்தால், பொது இடத்தில் செருப்பை கழற்றி அடிக்கக்கூட தயங்க மாட்டாங்க. இன்னொரு 10 சதவிகித பெண்கள் இருக்காங்க. விருபப்படும் நேரத்தில், விரும்பும் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு தேவை சபலம் அடையும் போதெல்லாம் ஒரு ஆண் வேண்டும் அவ்வளவு தான்.
மீதி உள்ள 80 சதவிகித பெண்களின் நிலை, ரொம்ப கேள்விக்குறியா இருக்கு. அவர்கள் ஒழுங்காக இருந்தாலும் கூட, அவர்களின் சூழ்நிலை மற்றும் அவர்களை மடக்க நினைக்கும் ஆணின் திறமையினை பொறுத்து திருமணத்துக்கு முந்தைய உடலுறவுக்கான சாத்தியகூறுகள் உருவாகிறது. தெரியாமல் கற்பை இழப்பது, வற்புறுத்தலால் உறவு கொள்வது போன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த மாதிரியான பெண்கள் மீதே அரங்கேற்றப்படுகின்றன.
பணம், பதவி, அதிகாரம் உள்ளவர்கள் தங்களை கடவுளாக நினைத்துக் கொள்கிறார்கள். எது வேண்டுமானாலும் செய்கிறார்கள். அவர்களை நம்பி செல்லும் பெண்கள் ஏமாந்து விட்டு ஒருநாள் வருவார்கள். ஆனாலும் ஒழுக்கம் போனது போனதுதான். அது தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் எத்தனையோ தியாக ஆண்கள் உள்ளனர். தாலி காட்டிய பிறகாவது உண்மையாக இருந்தால் நல்லது.