ஊட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா ஒரு புகழ்பெற்ற இடம் ஆகும். இங்கு பலவிதமான தாவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பலரும் சிம்ஸ் பூங்காவை பார்வையிடாமல் செல்ல மாட்டாங்க. அங்கு பூக்கும் சில அரியவகை பூக்களுக்கு எப்பவுமே மவுசு ஜாஸ்தி. தற்போது பச்சை கலரில் பூத்துக்குலுங்கும் அந்தப்பூவை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
பச்சை நிறத்தில் பூத்திருக்கும் அந்த அதிசயப்பூ ரோஜாப்பூ தான். ரோஜா பல்வேறு நிறங்களில் பூக்கக்கூடியது. அதில் பச்சை நிறமும் ஒன்று. இந்த வகை ரோஜாக்கள் அரிதானவை. எங்காவது ஒரு இடத்தில் தான் இவை பூக்கும். தற்போது இந்த பச்சை ரோஜா குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்குவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதை பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதுவரை பார்த்திராத பச்சை நிறத்தில் பூத்துள்ளதால் இதை வாங்குவதற்கு மக்கள் பலரும் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர். இதன் மாதிரிகளை சேகரித்து அதிக அளவில் பச்சை ரோஜா செடிகளை நடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் எளிதாக இந்த அதிசய ரோஜாவை கண்டுகளிக்க முடியும். ரொம்ப தூரத்துல இருக்குறவங்க முடிஞ்சா நேர்ல போய் பார்த்துட்டு வாங்க. முடியலைன்னா போட்டோவில் பார்த்துக்க வேண்டியது தான்.