notification 20
Spellbound
தனுசுடன் பல நாள் இருந்த பகையை நடிகையின் மூலம் தீர்த்துக்கொண்ட சிவகார்த்திகேயன்? இதைத் தான் வளர்த்த கெடா மார்பில் பாயும்ன்னு சொல்லி இருப்பாங்களோ!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு முன்னணி நடிகராக வளம் வர பிள்ளையார் சுழி போட்டவர் தனுஷ். இவர் தான் முதன் முதலில் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிக்க 3 படத்தில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். அதுக்கு அப்புறம் தன்னுடைய சொந்த செலவில் எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரித்து சிவகார்த்திகேயனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவரும் தனுஷ் தான்.

அதுக்கு அப்புறம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் ஏறுமுகம் தான். நடுவில் இவங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை வந்து பேச்சு வார்த்தை இருவருக்குள்ளும் முற்றிலும் குறைந்துவிட்டது. இப்போ தனுஷ் அவருடைய வழியில் தனியாக பயணம் செய்கிறார், சிவகார்த்திகேயனும் தன்னுடைய பாதையில் பயணம் செய்கிறார். தனுஷ் தற்போது வாத்தி படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டிக்கு முன்னர் இந்த படத்தில் தனுசுடன் நடிக்க டாக்டர் மற்றும் டான் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகனிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தனர். தனுஷ் போன்ற பெரிய நடிகருடன் நடித்தால் நமக்கு மார்க்கெட் பிச்சுக்கும் என்று பிரியங்கா நினைத்திருக்கிறார். பின்னர் சிவகார்த்திகேயன் இந்த விஷயத்தில் தலையிட்டு நீ இதுவரைக்கும் ரெண்டு படம் தான் நடிச்சுருக்க.

அறிமுக நாயகிகள் அவர் கூட நடிச்சா அவங்களோட மார்க்கெட்டே காலியாகிடும், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்றேன் அந்த படத்தில் நடிக்காதே என்று சிவா ப்ரியங்காவிற்கு அறிவுரை சொன்னதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சிவகார்த்திகேயனின் பேச்சை கேட்டு தான் அந்த படத்தில் இருந்து பிரியங்கா விலகிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசிக்கொள்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts