notification 20
HotPicks
பல வருடங்களாக இரவு நேரத்தில் மக்கள் செல்ல பயப்படும் திகிலான பங்களா! சென்னையே பார்த்து நடுங்கும் திருவான்மியூர் பங்களா!

சாதாரணமாக ஒரு கிராமத்தில் பேய் இருக்குன்னு சொன்னா அந்த ஊர் மக்கள் மட்டும் தான் பயப்படுவாங்க. அந்த ஊர் பக்கம் போற மக்கள் அதை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள். முக்கியமாக நகரத்தில் வாழும் மக்கள் இந்த பேய், பிசாசு பற்றி எல்லாம் அதிகமா போட்டு அலட்டிக்கொள்ள மாட்டார்கள். சென்னை போன்ற ஒரு மிகப்பெரிய நகரத்தில் இது மாதிரி சம்பவங்களும் நடக்குதாம்.

F-2 செர்வாட் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர் இந்த சாலையில் உள்ள ஒரு பழமையான பங்களா பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு பேய் இந்த பங்களாவில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு மிகப்பெரிய பணக்காரரின் மகள் இந்த வீட்டில் வாழ்ந்து தற்கொலை செய்துகொண்ட பின்னர் இந்த பங்களா முழுவதும் பூட்டப்பட்டது. இந்த பங்களாவை சொந்தம் என்று சொல்லிக்கொண்டு உறவாட அந்த பணக்காரரின் சொந்தக்காரர்கள் யாரும் வரவில்லை.

இரவு நேரத்தில் இன்னமும் அந்த பெண் இந்த பங்களாவை சுற்றி வருவதாக அக்கம் பக்கம் வசிக்கும் மக்கள் சொல்கிறார்கள். இரவு நேரத்தில் இந்த பங்களாவில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கும் என்றும், பங்களாவின் கதவை இரவு முழுவதும் யாரோ தட்டுவதை போல சத்தம் கேட்கும் என்றும் சொல்கிறார்கள். இரவு நேரத்தில் இந்த பங்களாவை நாம் கடந்து செல்லும் வேளையில் செல் போன் டவர் முற்றிலும் செயலிழந்துவிடும். இந்த பங்களாவை இரவில் கடக்கும் நேரத்தில் தானாக மாளிகையின் கதவுகள் திறந்து நம்மை உள்ளே வரும்படி அழைக்குமாம்.

காலை நேரத்தில் உள்ளே இருந்து ஒரு பெண் வந்து பங்களாவின் கதவை மூடிக்கொள்வாராம். ஒரு முறை 5 இளைஞர்கள் இங்க அப்படி என்னதான் இருக்கு என்று பார்க்க உள்ளே தைரியமாக சென்றுள்ளனர். உள்ளே சென்று சில மணி நேரங்களிலேயே அங்கு நிறைய அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்ந்ததால் வெளியே வந்துவிட்டனர்.

Share This Story

Written by

Karthick View All Posts