சென்னைக்கு பெண் ஒருவர் மேயரா வரப்போறாங்க என்றவுடனே, வழக்கம் போல, 50 வயசுக்கு மேல இருப்பாங்க. ஏற்கனவே தெரிந்த முகம் யாராவதாக இருக்கும் என்று நினைத்தனர். திடீரென காலேஜ் பொண்ணு மாதிரி இருக்க பிரியா ராஜனை, மேயர் வேட்பாளராக அறிவிச்சாங்க. அவங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இப்போ மேயர் பதவியும் கையில் எடுத்தாச்சு. இவ்வளோ கௌரவம் மிக்க பதவியை, பிரியா கைபற்றிய வயது எவ்வளோ இருக்கும்?
சொன்ன நம்ப மாட்டீங்க. அவங்களுக்கு 28 வயசு தான் ஆச்சாம். 1994 ஆம் ஆண்டு பிறந்து இருக்காங்க. எம்.காம் படிப்பு படிச்சிருக்காங்க. ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழச்சி தங்கபாண்டியனை பார்த்து, அழகான வேட்பாளரை வெற்றி பெற வையுங்கள்னு உதயநிதி சொன்னாரு. அதே மாதிரி இவங்களுக்கும் நிறைய ஃபேன்ஸ் வந்துட்டாங்க. சின்ன வயசு மேயரா இருந்தா, யார் தான் ரசிக்காம இருப்பாங்க? தனியா ஃபேன்ஸ் குரூப் தொடங்கி, அதில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ளனர்.
இப்போ டெய்லியும், மேயர் பிரியா என்ன பண்ணாலும் அது ஹாட் நியூஸ் ஆயிருது. பதவி ஏற்ற முதல் ஒரு சில நாட்கள், மாஸ்க் அணியாமல் தான் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தாங்க. அப்போது அவங்க பேசினது குழந்தை மாதிரி இருக்குன்னு மீம்ஸ் பரவ ஆரம்பித்த உடனே, மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும் ஸ்டைல் மாறியாச்சு. நிதானமாக உட்கார்ந்து, கண்கள் மட்டும் தெரியும் படி மாஸ்க் அணிந்து பேட்டி கொடுக்கறாங்க. இதன் மூலம் அவங்க பேசுவதில் இருந்த குழந்தை தனத்தை வைத்து, கிண்டல் செய்யப்படுவது ஓரளவுக்கு குறைந்துவிட்டது.
இருந்தாலும், மீடியா முன்பு அவங்க பேசும் வாய்ஸ் கேட்ட உடனே, "யாருப்பா குழந்தைய பேச விட்டதுன்னு" பேஸ்புக் வீடியோக்களுக்கு கீழே கமெண்ட்ஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சாம் கரண் எப்படி சுட்டிக்குழந்தைன்னு பெயர் வாங்கினாரோ, அதே போல சென்னை மேயர் பிரியா சுட்டிக்குழந்தைன்னு சோஷியல் மீடியாவில் பெயர் வாங்கிட்டு இருக்காங்க. நம்ம மக்கள் என்னென்னத்தை எல்லாம் டிரெண்ட் பண்றாங்க பாருங்க.