பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பரத். இளம் வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்ததால் இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வளம் வருவார் என்று ஆரம்பத்தில் பேசிக்கொண்டார்கள். இவரும் ஆரம்பத்தில் துடிப்புடன் நிறைய படங்களில் நடித்து வந்தார். காதல் படத்தில் தனி ஹீரோவாக நடித்து எல்லோரும் பாராட்டும்படியான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அதுக்கு அப்புறம் தொடர்ந்து இவர் எந்த படத்தில் நடித்தாலும் வெற்றி இவருக்கு எட்டாத கனியாகவே இருந்தது. காதல் படத்துக்கு அப்புறம் இவர் நடிப்பில் இதுவரை வெளியான 20க்கும் மேற்பட்ட படங்கள் வெற்றி பெறவில்லை. இதுக்கெல்லாம் என்ன காரணம் என்பதை நடிகர் பரத்தே அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான படம் திருவிளையாடல் ஆரம்பம். இந்த படத்தில் முதலில் நடிக்க பரத்தை தான் இயக்குனர் அணுகி இருக்கிறார். அந்த படத்தின் கதை இவருக்கு பிடிக்காததால் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷை இயக்குனர் நடிக்க வைத்தார். படமும் மெகா ஹிட் அடித்தது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க பரத்தை தான் இயக்குனர் முதலில் தேர்வு செய்தார்.
பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் பரத் நடிக்க முடியாமல் போனது. பின்னர் சிம்புவின் கைக்கு அந்த படம் சென்று சிம்புவும் அந்த படத்தில் இருந்து விலகிக்கொள்ள கடைசியில் கோ படத்தில் ஜீவா நடித்து படம் சூப்பர் ஹிட் அடித்தது. கோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிக்க முடியாமல் போனதால் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் தூக்கம் வராமல் தவித்துள்ளார் பரத்.